Tuesday, September 27, 2011

என்ன வாழ்கைடா

என்ன வாழ்கைடா  இது  ஒருத்தனுக்கு ஒரு 1 வருட இடைவெளியில்  என்ன என்ன மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றங்கள் அவன் வாழ்க்கைய அப்படியே மாத்திடுச்சு.

பல வித ஏமாற்றங்களுக்கு பிறகு ஒரு நல்ல வேலையில் கடந்த 6 மாத காலம் ஒரு நல்ல கம்பெனில வேலை பாக்குறேன்.

இனி மறுபடியும் என் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள உங்கள்  எந்திரன்...





Saturday, January 22, 2011

நீண்ட இடைவெளிக்கு பிறகு பலவித மாற்றங்களுடன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பலவித மாற்றங்களுடன்


வாழ்கை என்னும் இந்த மிகபெரிய போராட்டத்துல  பலவித தடைகளை தாண்டி இன்னும் பெரிய தடைகளை  எதிர் நோக்கி போய் கொண்டு இருந்த வேலையில் வேலை இல்லாம இருந்த எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை போட்டு இழந்து உள்ளேன் அந்த அனுபவம் தான் சிறிது நாளைக்கு முன்பு எனக்கு ஒரு வேலை வாங்கி தந்தது .

அது ஒரு மார்க்கெட்டிங் வேலை அந்த வேலையில் சேர்ந்து வேலை பார்த்து அதிலும் மிக பெரிய தடைகளை தாண்டி தட்டி தடுமாறி தாண்டி வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் சமுதாயம் என்னும் மக்கள் பலர் விரட்ட இந்த சமுதாயத்தில் என்னை நிலை நிறுத்திக்கொள்ள அப்படி ஒரு வெளி வேஷம் இருந்தால் தான் இந்த சமுதாயம் நம்மை அங்கிகரிக்கும் அதாவது நாம் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த மனிதன் ஆனால் உண்மையில் நம் மனதில் எந்த ஒரு நிம்மதியும் இல்லாமல் கடைசி வரை மற்றவர்களுகாக மட்டும் வாழ்ந்து மடிவோம் .


அதிலும் முக்கியம் பணம் இந்த பணத்தை தேடி பலர் தங்களை மறந்து தங்கள் வாழ்வை  மறந்து பணத்தை மட்டும்  தான் மனதில் வைத்து கொண்டு வாழ்க்கையே வின் அடித்து கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம் .  அந்த ஓட்டத்தில் நானும் என் குடும்பம்திற்காக ஓடுகிறேன் நான் மட்டும் அல்ல அனைவரும் தான் இந்த குடும்பம் சூழ்நிலை தான் மனிதனை என்றும் விரட்ட நாமெல்லாம் வாழ்கையில் எப்பொழுதும் எதையோ ஒன்றை தேடி கொண்டு ஓடுகிறோம் ...

Thursday, October 21, 2010

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்


இன்று சென்னை கே கே நகரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச கலர் டிவி கொடுக்கபட்டது இதில் விசேஷம் என்னவென்றல்  குடிசையில் வாழும் ஏழை மக்களும் சேரி பல கோடிக்கு சொந்தமான பணகரரும் சேரி அந்த இலவச கலர் டிவியா  வாங்க ஒரு வரிசையில் நின்னது தான்  இலவசம் என்றல் பிணமும் கூட வரும் போல அதாவது காசு என்றல் பிணம் கூட வாயா திறக்கும் என்ற சொல்வது போல இந்த அரசு இலவசம் இலவசம் அனைத்தும் இலவசம்  என்று கொடுத்து  நம் மக்களை நல்ல சோம்பேறி ஆக்கி உள்ளது.

டிவி வாங்க வந்த பணம் படைத்தவரிடம்  கேட்டதுக்கு அரசு இலவசமாய் கொடுப்பதை ஏன் விட வேண்டும் நங்கள் விட்டால் எங்களுக்கு உரிய டிவியை வேறு ஒருவர் பெற்று அதன் பலனை பெற்று விடுவர் என்று கூறுகின்றனர்.

உண்மையில் அரசாங்கம் நமக்கு தருவது இலவசம் அல்ல நாம் செலுத்தும்  வரி முலம் தான் அரசு நமக்கு இதை தருகின்றது ஆனால் நாம் அனைவரும் நாமளா அரசுக்கு வரி செலுத்துகின்றோம் என்று இலவசம் என்றல் வாயா பிளந்துகிண்டு போய் அதை வாங்க நிற்கின்றோம் ஆனால் அந்த இலவசம் நமக்கு பின் நாளில் அது பெரிய பிரச்சனையாக வரும் அது என்ன பிரச்னை என்று நமக்கு தெரியும் அது வேறு ஒன்றும்  அரசு நாம் செலுத்தும் வரியில் இருந்து  மக்களுக்கும் நாட்டிற்கும் உதவும் வகையில் எந்த ஒரு திடத்தையும் செய்யாமல்  அனைத்தையும் இலவசமாக கொடுப்பதால் அரசின் கஜான இந்த இலவச திட்டத்திற்கே பல கோடியே விழுங்கி விடுகிறது பின் அரசாங்க கஜான காலி ஆகி விடும் பின் அரசு என்ன செய்யும் இருக்கும் அனைத்தும் வரியையும் உயர்த்தும் வரி உயர்ந்தால் அனைத்தும் பொருள்களின் விளையும் உயரும் உயரும் என்ன உயரும் உயர்ந்து விட்டது இதை எல்லாம் அறியாமல் நம் மக்கள்  இன்னும்  இலவசம் இலவசம் என்று ஏமார்ந்து  கொண்டு இருக்கின்றனர்.

இதையே  இலவசம் இலவசம்  என்று சென்னையில் ஒரு துண்டு சிட்டு பெருசுரம் செய்ய பட்டது இந்த செய்தி அனைவரும் அறிந்து இருப்பிர்கள் அதில் உள்ள செய்தி என்னவென்றல்

இன்றைய தமிழகம்  என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா?  தமிழ்  நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது  மட்டுமா அரசு செய்யும் ஒவ்வறு கடன் தள்ளுபடி திட்டமும் இந்த இலவச திட்டத்தை போல தான் கடன் தள்ளுபடி  என்று இந்த அரசு அறிவித்தல் தான்  நம் இன்று அனைத்து பொருள்களின் விலையும் வின்னைதொடும் அளவிற்கு  உள்ளது .


ஆகா  இனி மேலாவது  இலவசம் என்று சொல்லும்  அரசை நம் மக்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம்  வேண்டாம்.

ஏழாம் அறிவு

 ஏழாம் அறிவு

 மனிதனின்  ஏழாம் அறிவாக  எப்பொழுதும்  இருபது  கடவுள் தான் இதை யாராலும் மறுக்க முடியாது
என்னதான் மனிதனை பல்வேறு விதமான நோய்கள் தாக்கினாலும் மனிதன் அதற்கு மருந்தை கண்டுபிடித்தாலும் அவனது அந்த அறிவு கடைசியா நினைப்பது கடவுள் ஏன் என்றல் மனிதன் எப்பொழுதும் தனது ஏழாவது அறிவாக கடவுளை நினைப்பதை கடவுளை வணங்குவதை கொண்டு உள்ளன் ஆனால் அந்த ஏழாவது அறிவாக மனிதன் அறிவிக்க இல்லை மனிதனை கட்டுபடுத்த ஒரு பொருளாக கடவுளை கொண்டுள்ளான் அதலால் தான் மனிதன் எப்பொழுதும் கடவுளை தன்னை விட ஒரு படி மேலே வைத்து உள்ளன்.

மனிதனுக்கு எந்த ஒரு கஷ்டமோ துக்கமோ சந்தோசமோ  அவன் அவனையே அறியாமல் நினைப்பது கடவுளை தான்.

கடவுள் இல்லை என்று சிலர் கூறுவதும் உண்டு அது அவர்களின் சுய சிந்தனையாக எப்போதும்  இருக்காது அவர்கள் சொல்வது  நான் பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என்று ஆனால் உண்மையில் அவர்களும் ஏதேனும் ஒரு கஷ்டமான நேரத்தில் அவர்களை  அறியாமல் கடவுளை நினைப்பது உண்டு இதை அவர்களின் உள்ள மனம் உணரும்.

மனிதனுக்கு எந்தோ ஒரு இன்பமோ துக்கமோ அவனின் குறையே எண்ணியே எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுகிறான் அது மனிதனின் உணர்வு ஒரு மனிதன்  எவ்வளவு பெரிய மன தைரியம் உள்ளவன் என்றலும் எந்த ஒரு கஷ்டத்திலும் அவனது மனது இயல்பாகவே  கடவுளை  தான் நினைக்கிறது இதை தான் மனிதனின் ஏழாவது  அறிவு என்று சொல்கிறேன்.

Tuesday, October 19, 2010

நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை

நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை 


என் நண்பனின் வலியுருதளுக்கு  இணங்க  நேற்று இரவு எந்திரன் படத்திற்கு சத்யம் திரை அரங்கிற்கு சென்றேன் என்னுடன் வந்த என் நண்பர்களில் நான் மட்டும் தான் அந்த படத்தை முதல் முறையாக பார்கிறேன் மற்றவர்கள் எல்லாம் இரெண்டாம் முன்றம் தடவை பார்கின்றனர்.

அனைவரும் பாராட்டிய எந்திரன் படத்தை நான் பார்க்காமல் சன் குழுமம் நம்மை ஏமாற்றி நம் தினசரி வாழ்வில் வரும் மற்ற படங்களை போல அல்லாமல் இந்த எந்திரன் பாடத்தை சன் குழுமம் நமக்குள் திணித்த இந்த பாடத்தை பற்றி பலரும் பாராட்டி விமர்சனம் வலை பூக்களில் எழுதி உள்ளனர் ஆனாலும் படம் பார்த்த பிறகு  என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்ய விரும்பி எழுதிகிரேன் விமர்சனம் என்றல் படத்தின் கதை இல்லை என்னேன்றல் பாடத்தை அனைவரும் பார்த்து இருபிர்கள் அதனால்  பாடத்தை பற்றி தான்.

எந்திரன் இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை ஷங்கர் எப்பொழுதும் மக்களின் பிரச்சனைகள் பற்றி ஒரு மைய கருத்தை வைத்து தான் இருக்கும் அவரின் சென்ற படமான சிவாஜியில் கூட அளவுக்கு அதிகமாக சொத்தை வெளி நாட்டிலும் பினாமி பெயரிலும் உள்ள சொத்தை அவர்களிடம் இருந்து பறித்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவர் அவரின் அனைத்து படங்களிலும் மக்களை பற்றி ஒரு மைய கருத்து இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு ரோபோவின் காதலை பற்றி அதுவும்  கிராபிக்ஸ் அனைத்தும் ஹாலிவூட் தரத்திற்கு என்று கூறி ஒரு சுட்டி டிவி ஜெட்டிக்ஸ்  என்று குழந்தைகளின் டிவிகளில் வருவது போன்றும் ராமநாராயணன் படத்தில் வருவது போன்றும் தான் உள்ளது .

படத்தை பற்றி சொல்லும் போது முதற் பாதியில் ரஜினி எந்திரனை உருவாக்கும் விதம் நல்ல உள்ளது. சந்தனமும் கருணாசும் அந்த ரோபோ உருவாகும் போது அவர்கள் செய்யும் காமடியும் பரவாயில்லை ஆனாலும் சந்தானம் கருணாசின் காமடி பெரிதாக ஏடு படவில்லை. அந்த ரோபோ உருவனதுக்கு பிறகு படம் போறது தெரியாமல் நல்ல இருக்கு அதிலும் ரோபோ செய்யும் காமடி நன்றாக உள்ளது அதிலும் ரோபோவிடம்  கொச்சி ஹனிபா செய்யும் காமடி மிகவும் நன்றாக உள்ளது மற்றும் ரோபோ செய்யும் சிறு சிறு காமடிகளும் மிகவும் நன்றாக உள்ளது படத்தின் முதற் பாதி ஷங்கரின் மற்ற பாடத்தை போன்று மிகவும் ஜாலியாக நன்றாக உள்ளது அதிலும் ரஜினி ரோபோவ நடிப்பில் வென்று உள்ளார் அவர் ரோபோவ பேசும் விதம் மிகவும் நன்றாக உள்ளது ரோபோவாக ரஜினி நடிப்பில் ஒரு படி மேலை சென்று விட்டார்.


ரோபோ பிரசவம் பார்ப்பது என்பது எல்லாம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படத்தின் இரெண்டாம் பாதியில் அதை எல்லாம் மிஞ்சும் வகையில் வருவதால் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அதிலும் ரோபோ போய் கொசுவை பிடிக்க சென்று அதனிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர இருக்கு.


ரெண்டாவது பாதியில் ஷங்கர் நம்மை சிறு குழந்தைகளாக மாற்றி சுட்டி டிவி ஜெட்டிக்ஸ் போன்ற சேனலில் வருவது போன்று கிராபிக்ஸ்  மயமாக  படத்தை மாற்றி விடுகிறார் அதிலும் எந்திரன் படம் இந்திய வரலாற்றில் தயாராகும் மிக பெரிய பட்ஜெட் படம் என்று கூறினார்கள் ஹாலிடவுட்   படத்திற்கு இணையான கிராபிக்ஸ் ஹாலி படத்தில் பணி செய்தவர்கள் தான் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் வேலை செய்தனர் என்று சொன்னார்கள் ஆனால் ரெண்டாம் பாதியில் நிறைய ரோபோ வரும் கட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் மிகவும் கேவலமா உள்ளது இந்த அளவுக்கு நிறைய பணம் ஹாலிவுட்  படத்தில் வேலை செய்தவர்களை ரமணரயணிடம் கொடுத்து இருந்தால் அவர் இந்த எந்திரன் பாடத்தை விட 100 மடங்கு கிராபிக்ஸ் இல் சிறந்த படத்தை கொடுத்து இருந்திருப்பர் .

ரோபோ ரஜினி வில்லனாக மாறியதும் படம் பார்க்கும் நம் அனைவர்க்கும் ஒரு வித எரிச்சல் வருகிறது மற்றவர்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு வந்தது அதிலும்  ரோபோ தனக்கு தானே உடனேய நிறைய ரோபோக்கள் செய்து கதாநாயகியை கடத்தி தனி ராஜ்யம் போல இருப்பது நல்ல இல்லை அதவும் நிறைய ரோபோகள் வரும் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது அதிலும் ரெண்டாம் பாதியில் அடுத்து அடுத்து பாடல் வருவது அலுப்பாக உள்ளது.

ரெண்டாம் பாதியில் ரோபோ ரஜினி மே மே என்று ஆடு போல கத்தி உண்மையான ரஜனிய கண்டுபிடிக்கும் காட்சி மட்டும் நன்றாக உள்ளது.

படத்தின் இறுதி காட்சிகளிலும் ரோபோ  ஐஸ்வர்யாவை கடுத்தும் போதும் ரோபோ சண்டை இடும் காட்சிகள் ரொம்ப போர் அதிலும் படத்தின் இறுதியில் ரோபோ பலவாரு மாறுவது கிராபிக்ஸ் இல் மிகவும் கேவலமாக உள்ளது ஹாலிவுட் அளவிற்கு ஷங்கர் முயற்சி செய்து உள்ளார் ஆனால் கட்சில் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது ஏதோ கார்ட்டூன் டிவி பார்ப்பது போன்று உள்ளது அது மட்டுமா எப்பட படம் முடியும் என்று உள்ளது.

மொத்தத்தில் எந்திரன் முதல் பாதி மட்டும் பார்க்கலாம்.

ரஹ்மானின் பாடல்களில் காதல் அணுக்கள் மற்றும் கிளிமஞ்சாரோ பாடல் மட்டும் மனதில் பதிகின்றன மற்ற பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை ரஹ்மான் ஷங்கர் ரஜினி இவர்களின் மற்ற பட பாடல்கள் அனைத்தும் மிக பெரிய ஹிட் ஆகும் ஆனால் இந்த படத்தில் அனைத்தும் பாடல்களும் மக்களிடம் பெரிதாக போய் சேர வில்லை படத்தின் பின்னணி இசையும் பெரிதாக சொல்லிகொள்ளும்படி இல்லை.

எந்திரனில் ஜொலிப்பது ரோபோ ரஜினியின் நடிப்பு மற்றும் சன் குடும்பத்திற்கு பண மழை தான்,

கண்டிப்பாக ஷங்கரின் கனவு படமாக எந்திரன் இருந்திருக்கும் அது சன் குழுமம் கைவசம் செல்லும் முன்பு ஆனால் ஷங்கர் நினைத்த எந்திரன் கண்டிப்பாக இந்த எந்திரன் படமாக இருக்காது இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை சன் குழும படம் இந்த படத்திற்கு அப்படி என்னதான் 200 கோடிக்கு செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை பாடலுக்கு தான் செலவு நம்மை போன்றவர்களை ஏமாந்து இந்த படத்தை பார்த்ததுதான் செலவு.

எந்திரன் சன் குழுமத்திற்கு அடித்த ஜாக்பாட்.......

Friday, October 15, 2010

வெற்றியும் தோல்வி

 வெற்றியும் தோல்வியும்


வெற்றி

வெற்றி எதிரியை மட்டும் சேர்க்கும்
ஒரு மிக பெரிய எதிரி

தோல்வி

தோல்வியின் தனிமையில் உற்ற நண்பர்களை
நமக்கு உரித்து கட்டும்
ஒரு உற்ற தோழன்  

மனிதனை அளிக்கும் இயற்கை

மனிதனை அளிக்கும் இயற்கை 



மனிதனுக்குள் எத்தனை விதமான அறிவுகள்  எத்தனை  இருகின்றது என்று மனிதனே மனிதனை பற்றி பலவித ஆராய்சிகள் செய்கின்றான் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ந்து  அதற்கு மருந்தும் கண்டு பிடிகின்ற்றான் ஆனால் உண்மைலே அந்த நோய்கள் ஏற்பட காரணமானவன் மனிதன் தான். ஒரு தவறு செய்ய்பவனும்மே மனிதன் அதை திருத்த நினைப்பதும் மனிதனே.

மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று சொல்கின்றனர் ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றல் இயற்கையை மீறி புதிய புதிய  கண்டுபிடிப்புகள் என்று மனிதன் இயற்கையை  மீறி  இயற்கையை வெல்ல ரொம்ப ஆர்வமாய் இருக்கிறான் ஆனால் இயற்கையை வென்றதாக மனிதர்கள் நினைகிறார்கள் ஆனால் கடைசியில் வெல்வது இயற்கை தான்.


நம்மை சுற்றி இருப்பவை இயற்கை அந்த இயற்கையே அடிப்படையாக வைத்தே மனிதன் அந்த காலத்தில் வாழ்ந்தான் ஆனால் காலம் செல்ல செல்ல மனிதன் அந்த இயற்கையே அளித்து மனிதனின் படைப்பை அடிபடையாக வைத்து வாழ அற்பித்தன் அதனால் தான் அந்தந இயற்கை அழிவு நமக்கு பல்வேறு நோய்கள் இயற்கை சீற்றங்கள் என்று பல மனிதனை அளிக்க நடக்கின்றது ஆனால் மனிதன் ஒவ்வரு அழிவின் போதும் அதை தடுப்பது எப்படி என்று நினைத்து இயற்கையே அளிப்பதை விடாமல் அதை தடுகின்றோம்  என்று கூறி புதிய புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து மேலும் அழிவை தேடி கொள்ளுகின்றோம்.

தினம்தோறும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வர வர அதனல் இயற்கை எப்படியும் ஒரு வகையில் அழிந்து கொண்டு இருக்கின்றது.

என்னதான் பலவிதமான அமைப்புகள் இயற்கையை காக்க வேண்டும்  என்று செயல் பட்டாலும்   உலக  வல்லரசு  நாடுகளும்  சேரி  உலக  வல்லரசு  ஆகா  துடிக்கும்  நாடுகளும் சேரி   தொழில் முன்னேற்றம் விஞ்ஞான முன்னேற்றம் விண்வெளியில் போய் மனிதன் வாழ போகிறான் என்று அதில் நாடுகளுக்கு இடையில் போட்டி என்று கூறி இயற்கையே அளித்து கொண்டு உள்ளனர்.

தொழில் முன்னேற்றம் என்று கூறி இருக்கும் விலை நிலங்களை எல்லாம் தொழிற் கூடங்களாக மாற்றி விவசாயத்தை உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு கொண்டு அழித்து கொண்டு இருக்கின்றனர் இது மட்டுமா தொழில் முன்னேற்றத்தால் எப்போலுவதும் முன்னேறுவது நகரங்கள் மட்டும் தான் நகரங்கள் முன்னேறுவதால் அங்கு தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசாயத்தை விட்டு விட்டு நகரத்தை நோக்கி வருகின்றனர் இதனால் விளைநிலம் வெறும் நிலமாக மாறுகின்றது இது தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது அவர்கள் விலை வெறும் நிலங்களை தொழிற் கூடங்களாக மாற்றுகின்றனர் இதனால் வரும் காலத்தில் மனிதன் தொழிற் தொழிற் என்று கூறி உண்பதற்கு உணவு இல்லாமல் மனித இனம் அழிவை நோக்கி செல்கின்றது .

மனிதன் புதிய புதிய கண்டு பிடிப்புகள் என்று கூறி உலகத்தை அளித்தது போதாது என்று உலகத்தை அளித்த பின் வாழ இடம் தேடி இப்பொழுது விண்வெளியில் இடம் தேடி கொண்டு இருக்கின்றன் . விண்வெளியில்  உண்மைலேயே மனிதர்கள் போல யாரேனும் அங்கு வாழ்ந்தால் பின் ஒரு நாள் அங்கு சென்ற மனிதன் அங்கும் புதிய கண்டுபிடிப்பு என்று அங்கு உள்ளவர்களையும் அழித்து விடுவான் இதை சொல்லாமல் மனிதன் சொல்லத்தான் விண்வெளியில் உள்ளவர்களை அளிப்பது போன்று ஒரு மிக பெரிய ஆங்கில படம் அவதாரை மனிதன் இப்பொழுதே எடுத்து விட்டான் போல அதனால் தான் அந்த படமும் நம்மிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு மிக பெரிய வெற்றி படமாக ஆனதோ.

ஏதோ எப்படியோ 2012 எப்போவோ  இந்த உலகம் மட்டும் அல்ல அழிவு என்று எங்கு எதில் ஏற்பட்டாலும் அது மனிதனால் மட்டும் தான் . 
Related Posts with Thumbnails