Monday, August 16, 2010

ரெக்கை கட்டி பறக்க

 ரெக்கை கட்டி பறக்க

தினசரி   நம்மை  சுற்றி  எவ்வளவோ  நடக்குது  நாமும் எவ்வளவோ வேலை செய்யுறோம் ஆனா நைட்  சாப்பிட்டு விட்டு நல்லாத்தான் தூங்க போரம் ஆனா சிலபேருக்கு படுத்தும் தூக்கம் வராது எதாச்சும் ஒரு வேலை நாளைக்கு செய்ய வேண்டி இருக்கும் இல்லை இன்னைக்கு செஞ்ச வேலை  எதாச்சும் தப்பா பண்ணி இருப்போம் இல்லைனா எதயாவது பற்றி யோசிசுகிடேஇருப்போம் ஒரு நல்ல தூக்கம் உடனே வராது. நாமும் அங்குட்டு இங்குட்டு பிரண்டு பிரண்டு படுத்து பார்போம் ஆனா தூக்கமே வராது அப்படி இப்படின்னு எப்படியாவது தூகுன்னாலும்   அடுத்த நாள் நம்மால எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது மனசு எதையோ ஒன்னா இழந்த மாதிரியோ இல்ல தேடிகிட்டே இருக்கும் அதனால அந்த நாளும் நமக்கு நல்ல  இருக்காது .

ஆனா  தூங்க போறதுக்கு முன்னாடி டிவியா  OFF  பண்ண  உடனே போய் படுப்போம்
படுக்க போறதுக்கு  முன்னாடி கடைசி நிமிஷம் வரைக்கும் டிவி பார்போம் இதுவே நம்ம
தூக்கத்த கெடுக்கற ஒரு பெரிய விஷயம் ஏன்னா டிவில என்ன பார்த்துட்டு வந்தோமோ
அதே நம்ம மனசுல ஓடிகிட்டே இருக்கும் தூக்கத்தையும்  கெடுக்கும்.

கொஞ்சம் நேரம் மனசு விட்டு  யாரு கூடவாச்சும் பேசுங்க  உங்க மனசுல உள்ள கவலைய  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்க மன பரத்தை குறைக்கும்.

அத விட ஒன்னு செஞ்சக  மனசு அப்படியே  ரெக்கை கட்டி பரந்த மாதிரி  உங்கள அறியாம தூங்கிவிடுவிங்க  அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க FM கேளுங்க
இல்லை மனதிற்கு இதமான  இளையராஜா பாடல்கள் கேளுங்க அதிலும் FM  கேளுங்க
ஏன்னா அதில் அவர்கள் இதமாக பேசும் விதம் அதில் வரும் பாடல்கள் ஆனைத்தும்
நம் மனதை இதமாக்கி நம்மை தலாட்டும் அதில் வரும் மெல்லிசை பாடல்கள் இளையராஜா பாடல்கள் பழைய பாடல்கள் என ஆனைத்தும் நம்மை மெய் மறக்கவைக்கும்  அப்படியே வனத்தில் ரெக்கை கட்டி பறந்து நம்மை அறியாமல் நன்று
தூங்கிவிடுவோம் அடுத்த நாள் நம் மனதும் மிகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும்
அன்றைய தினம் மிக நன்றாக இருக்கும் .....

என்ன நிங்களும் ரெக்கை கட்டி பறக்க  தயாரா .........

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails